Sunday, March 7, 2010

அமிர்தம்

மேலங்கியை வேண்டுமென்றே விட்டுச் சென்றால்
அந்தக் குளிர் காலத்தில் என்றும் தொட்டபெட்டாவைக்
காண்பது அமிர்தம்

பதட்டமான வாழ்க்கை முறையைச் சற்று ஓரமாக
நிறுத்தி விட்டு சிறுமியாய்க் கேட்டப் பாடல்களையே
திரும்பத் திரும்பக் கேட்பது அமிர்தம்

தன்னந் தனியாக காட்டிற்குள் ஊர்வலம்
செல்லும்பொழுது திடீரென எதிரில் வரும்
அந்த ஒரே ஒரு கார் அமிர்தம்

இளவேனிற் காலத்து உஷ்ணம் என்று குளிர் காலத்தில்
ஏங்கிக் கிடக்கும் போது மழைக்கு மறு நாள்
வானத்தை ஆக்கிரமித்த மேகக் கூட்டமும் அமிர்தம்

இன்றையப் பொறுப்புக்களும் எதிர்காலத்திற்கான
கேள்விகளும் நம்மை அங்கங்கு வாட்டியிருந்தாலும்
அந்தப் பூங்காவின் குளத்தில் வாத்துக் கூட்டமதனைக்
கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வது அமிர்தம்

விடலைப் பருவத்தில் தன் குழந்தை அரை குறையாகச்
சாப்பிடுவதைக் கண்டு கிரகவிப்பது கடினமாயினும்
தெருக்கோடி வரை புகைப்படக் கருவியின் துணையோடு
வண்ண மலர்களைப் படம் பிடித்து தன் ப்ளாக்-இல்
வெளியிடுவது அமிர்தம்

தான் குழந்தையைக் கிள்ளிய காலம் போய் தன் குழந்தை
தன்னை கிள்ளும் காலம் நடந்து கொண்டிருக்கும் போது
கொஞ்சமும் கலங்காமல் வாழ்க்கை நடத்துவது அமிர்தம்

பத்தாண்டு வருடங்களாக மீசையை எடுத்து விட்டக்
கணவனைக் கெஞ்சி மீண்டும் மீசை வைக்க வைத்து
அதை வருடிப் பார்க்கும் பழக்கம் அமிர்தம்

புதுக் கவிதை எழுதி, நலிந்தோர்க்குத் துணையாய்
நின்று, ஞானத்தின் பால் கவனத்தைத் திருப்பி
கவலைகளுக்கும் கடுஞ் சொற்களுக்கும் விடை
கொடுத்து அனுப்பிய வெற்றியும் அமிர்தம்

No comments: