Wednesday, March 31, 2010

கேள்வி

நாடு நமக்கு என்ன செய்தது
என்று கேட்காதே

நீ நாட்டுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

ஆண்டவன் எனக்கு என்ன செய்தான்
என்று கேட்காதே

நீ ஆண்டவனுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

குடும்பத்தினரை நோகடிக்காமல்
வைத்தாயா என்று கேள்

நலிந்தோரை வல்லவராக்க
முயன்றாயா என்று கேள்

வயது முதிர்ந்த தாய் தந்தையரை உன்
குழந்தை போல் கவனித்தாயா என்று கேள்

தாய் தந்தையரை அன்புடன் அரவணைக்கும்
குணத்தை வரமாகக் கேட்டாயா என்று கேள்

குழந்தையை வையாமல் வாழ்க்கை
நடத்துகிறாயா என்று கேள்

மனத்தில் மாசு அற்றவனாய்
இருக்கின்றாயா என்று கேள்

புறத் தூய்மை போல் அகத் தூய்மை
காத்திடுகிறாயா என்று கேள்

உள்ளத்தை கோயில் போல்
வைத்திருக்கின்றாயா என்று கேள்

நாடி வந்தவர் உன் வீட்டைக் கோவிலாகக்
காண வைக்கின்றாயா என்று கேள்

கற்றவை கற்ற பின் அதற்குத் தகுந்தவாறு
நிற்கின்றாயா என்று கேள்

சிறப்பான தத்துவங்களை பலருக்கு
சொல்கிறாயா என்று கேள்

இல்லாதவருக்கு தானம்
அளிக்கிறாயா என்று கேள்

பிறர் அறியாமல் செய்த தீங்கை
மன்னிக்கின்றாயா என்று கேள்

மற்றவரின் அன்பை உற்று
கவனிக்கிறாயா என்று கேள்

முற்றிலும் ஒரு பூவாக
இருக்கின்றாயா என்று கேள்