Thursday, March 25, 2010

உன்னை நீ அறிவாய்

விரும்புவது எது, வித்தகன் ஆனது எதில்
ஒன்றிப் போவது எதில், ஒருங்கிணைவது எதில்
மகிழ்வது எதில், மற்றோரை மகிழ்விப்பது எதில்

புத்துணர்ச்சி பெறுவது எதில், புது சிந்தனை வளர்ப்பது எதில்
சாந்தி கொள்வது எதில், மற்றோருக்கு சாந்தம் அளிப்பது எது
உள்மனது சொல்வது எது, உற்றாருக்கு சொல்ல வேண்டியது எது

இவை அறிந்து கொண்டும், தெரிந்து கொண்டும், புரிந்து
கொண்டும் கடந்து போகும் கணம் ஒன்றிலும் இவற்றையே
செய்து கொண்டிரு, உன்னை நீ அறிவாய்

No comments: