Wednesday, March 31, 2010

குறை ஒன்றும் இல்லை

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழப்பத்தை ஆடையாக நான் அணிந்தபோது
உன்னை உன்னையாகவே பார்த்து மகிழ
நான் இருக்கும் போது குழப்பம் ஏனடியோ என்றாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

கோபமாக நான் பிதற்றிய பொழுது உன் கோபம்
மனத்தில் இருந்து அல்ல எல்லாம் முன்வினையால்
வந்த பலன் என்று சொல்லாமல் சொன்னாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழந்தை உதாசீனப் படுத்தியதை அளவுக்கு அதிகமாக
நான் பொறுத்து இருந்ததைப் பார்த்து என்னை ஒரு
அன்னையாகவே கவனித்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

உன்னிடம் எல்லாம் சரியாகவே அமைந்துள்ளது
வீர நடை போடு, வெற்றி நடை போடு
என்று உள்ளன்புடன் உரைத்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

வேண்டியதைத் தந்திடும்
ஆண்டவனாகவே அவர் இருக்க
எனக்கிங்கு குறை ஒன்றும் இல்லையே

No comments: