Wednesday, March 31, 2010

பக்குவம்

பத்தில் முப்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

என் வீட்டைக் கோவிலாகக் கும்பிட
விருந்தினருக்கு அளித்து இருப்பேன்

இருபதில் நாற்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

காளையரை என் கைக்குள் அடைத்து
சேவைப் படை திரட்டி இருப்பேன்

நாற்பதில் அறுபதின் பக்குவத்தை
என் மனம் அடைந்தால்

நாலாப் பக்கமும் ஞானத்தின் சிறப்பை
பறை சாற்றுவேன்

No comments: