Monday, January 25, 2010

எந்தன் பரம்பொருளே

அன்னைக்குள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

அற்ப மனதை உடையவனிடமும்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

தந்தைக்குள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

தள்ளாடித் தவித்து வரும் உள்ளங்களில்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

கணவருள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

கடும் கவலைக்குள் வாழும் நெஞ்சத்தில்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

மக்கட் செல்வத்துள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

என்றும் கொடுப்பவனுமாய், எடுப்பவனுமாய்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

No comments: