Tuesday, January 19, 2010

போஹி கொண்டாடும் சிலர்

வீட்டில் உள்ளப் பழைய பண்டங்களை
தூக்கி எறிவதில் அத்தனை முனைப்பு கொள்வதோடு

மற்றவர்களால் தனக்குத் தீங்கு போன்ற எண்ணங்களை
அறவேத் தூக்கி எறிந்தனர் சிலர்

தமக்குள் ஒளிந்திருந்த சுய இரக்கம் மற்றும் அவநம்பிக்கை
அவற்றைப் பந்தை எறிவது போல் எறிந்தனர் பலர்

கவலை, கோபம் இவை இரண்டையும்
கட்டுக்குள் வைத்தனர் சிலர்

அந்த சிலராகவோ இல்லை பலராகவோ
நாமும் ஏன் இருக்கக் கூடாது?

மீனா

No comments: