Tuesday, January 19, 2010

அன்பு

உலகில் அன்பு என்ற அற்புத விளக்கை
சற்று மறந்தால் துன்பம் தானே வரும்

அன்றாட வேலைப் பளுவில் நாம் அன்பின்
ஆழத்தை மறக்கிறோம் எனத் தோன்றுகிறது

உலகில் தாயன்புக்கு நிகர் வேறில்லை
என்று சொன்னால் மிகையாகாது

இருப்பினும் எதுவும் எப்பொழுதும்
பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா

என்ற பாடலில் கூறுவதை சற்று
உன்னிப்பாக கவனிப்போம்

நம்மைச் சுற்றியுள்ள நல்லோர் நம்மிடம் காட்டும்
அன்பையும் தாயன்புக்கு நிகராகக் காணும்

மனப் பக்குவத்தையும் ஆண்டவன் நமக்கு
அருள்வாராக என்றே வேண்டுகிறேன்

- உலக மக்களுக்காகப் பிரார்த்தித்து வரும் உங்கள் அன்புத் தோழி
மீனா

No comments: