Wednesday, January 20, 2010

மோட்சம்

உன்னைத் தழுவியபோது விண்ணுக்கே சென்றேன்
விண்ணுக்கு சென்ற நான் அங்கு விண்மீனைத் தேடினேன்

தேடிய விண்மீன்கள் என்னை வாழ்த்திப் பாட
ஆகாசத்திலேயே உன்னிடம் கலந்தேன்

ஆகாசத்தின் வாயிலிருந்து மழையைப் பொழிந்தேன்
மழையைப் பொழிந்ததாலே மோட்சம் அடைந்தேன்

மோட்சத்தில் இருந்து விடைபெற்ற நான் உன்னைத்
தொடர்ந்து நோக்கியே மோட்சத்தை மீண்டும் தொடர்ந்தேன்

ஒரு ஆணின் சார்பாக
மீனா

No comments: