Tuesday, February 16, 2010

சரஸ்வதித் தாயே!

அனாதைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

மன நோயாளிகள் தங்களைக் காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் தங்கள்
நிலையைப் பிறர் உணரச் செய்ய தேவையான
சொற்களை அவர் தம் நாவிற்கு அருள்க

ஆசையுடன் பெற்றெடுத்த தம் மக்களிடம்
என்றும் இனிமையாகப் பேசிடவே
பெற்றோர்களுக்கு அருள்க

ஞானத்தின் பெருமையை அனைவருக்கும்
விளக்கிக் கூறிடவே
அனைவருக்கும் அருள்க

மழலையில் உள்ளது போல என்றும்
கள்ளம் கபடம் இல்லாத வார்த்தைகளையே
அனைவரின் நாவிலும் அருள்க

இத்தனையும் அருளுவதற்கு இன்று
உனக்கும் இயலவில்லை எனின்
விரைவில் என்றாவது ஒரு நாள்

என் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாய்
என்றே நம்புகிறேன்
என் அருமை சரஸ்வதித் தாயே!

No comments: