Saturday, February 13, 2010

பச்சவந்தி

பிறந்த பொழுது நல்ல ஒரு
கண்காட்சிப் பொருள் ஆனேன்

வளர்ந்த பொழுது அன்னையின்
வளர்ப்புப் பிராணி ஆனேன்

விடலைப் பருவத்தில்
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆனேன்

வாழ்க்கைப் போராட்டத்தைக் கண்டு கலங்கிய பொழுது
சிதறி உடைந்த முட்டையின் கருவானேன்

மணவறையில் நல்ல ஒரு
கதாநாயகி ஆனேன்

மகளை ஈன்றெடுத்த போது அந்த
இயற்கை அன்னையாகவே ஆனேன்

இன்று கவி ஆன பொழுது
ஞானம் வளர்க்கும் நல்ல ஒரு பிரஜை ஆனேன்

நலிந்தோர் துன்பம் தீர்க்கும் தருணம்
அந்தக் கடவுளின் செல்லப் பிள்ளை ஆனேன்

சுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு
பச்சவந்தியாகவே பிறவி எடுத்துள்ளேன்

No comments: