Thursday, February 11, 2010

கலக்கம் ஏனோ?

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

ஓவென்று கொட்டும் அருவியைப்
பார்த்து ரசிப்பது போல

மக்களிடத்துக் காணும் புதுமையில்
இருந்து ஞானம் வளர்ப்போமாயின்

கலக்கமும் நம்மை அண்டக் கலங்கும்
மக்களிடையே நற் பழக்கமும் தொடரும்

தாய் தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் உலகத்தை தனதாக்கிக் கொள்ளலே

தந்தை தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் மூலம் தன்னறிவை உயர்த்திக் கொள்ளலே

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

No comments: