Saturday, October 15, 2011

காலாய்க் குறைந்த காமம்

உறவினர் தெய்வம் ஆனபின்
நண்பர் உறவினர் ஆனபின்
உலக மக்கள் நண்பரானபின்

சோகம் சுகம் ஆனபின்
மோகம் முகம் ஆனபின்
அன்பு அகம் ஆனபின்
வேகம் வேதம் ஆனபின்

வாழும் உயிர்க்கு
காமம் காலாய்க் குறைந்தும்
குறை என்று குறை கூறத்
தயங்குவர்
குன்றில் உறைந்த குமரனும்
கூத்த பெருமாளும்

1 comment:

Tamilthotil said...

சோகம் சுகம் ஆனபின்
மோகம் முகம் ஆனபின்
அன்பு அகம் ஆனபின்
வேகம் வேதம் ஆனபின்

ஒரு வித்தியாசமான உணர்வு உங்கள் கவிதையில்,”அன்பு அகம் ஆனபின்
வேகம் வேதம் ஆனபின்” அருமை

http://tamilraja-thotil.blogspot.com/