Sunday, July 10, 2011

கணினிக் காளை

காளையாகப் பிறந்ததனால்
கால்கட்டு மட்டுமா போடுவான்

கணினியையும் கட்டிக் கொண்டு
ஆளுவான்

மனைவியிடம் உன் கை விட மாட்டேன்
என்று உறுதியிட்டு

மனைவியின் கையை விட
மவுசின் கையையே அதிகம் விரும்புவான்

இரவில் மனைவியிடம் மயங்கிய அவன்
பகலில் மானிடரிடம் மயங்குகிறான்

மனைவி இல்லாமல் ஒரு மாதம்
இருந்து விடுகிறான்

மானிடர் இல்லாமல் ஒரு வாரம்
கூட தாங்க மாட்டான்

ஹார்டு டிஸ்க் ஐ கழட்டிப் பார்ப்பான்
கீபோர்டில் உள்ள தூசு துடைப்பான்

கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்

- கணினிக் காளையின் மனைவி

1 comment:

நாவலந்தீவு said...

ஏனிந்த கோபம கணினி மேல்...
/கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்/
அருமை.