Saturday, July 9, 2011

அமைதி

கானம் பாடும் குயில் இருக்க
காந்தம் என கண் இருக்க
காட்சி எங்கும் இறைவன் இருக்க
கடுகு தெறிப்பது போன்ற கோபம்
கடுகளவும் இல்லையடி பெண்ணே!

மூளை மங்கிய போதும்
மும்மரமான கவலை வேண்டாம்
கவலை இல்லா காலமதை
கடனாய்த் தருவான்
கல்லாய் இருக்கும் இறைவன்

கடனைத் திருப்பித் தரும் வேளை
கவலை தீர்க்கும் மருந்தாவாய்
கற்றது கற்றபடி கற்பித்து விடுவாய்

கவலை தோய்ந்த வாழ்விருந்து
விடுபட்டு பறந்த பரம்பொருளின்
சின்னமாய் நீயிரு

கவலை தேக்கி வைத்த மனமும்
பரம்பொருளே! ஆட்டத்தின்
முதல் பாதி தேக்கி வைத்த கவலை
மறு பாதி தீர்த்து வைக்கும் மருந்து

இன்றே அமைதி உன்னிடம் இருக்கு
இருப்பதை இயல்பாய் கண்டு விடு
அமைதி கானம் என்றும் பாடு!

No comments: