Saturday, January 1, 2011

இயற்கை அன்னை

வைகறைப் பொழுதில்
இயற்கை அன்னையின்
இனிய மௌன ராகம்

மௌனமாய் நம்
மனம் நுழைந்து
கானமாய்ப் பாடும்

கரியதொரு ஆடையுடன்
அரியதொரு காட்சியுடன்
இயற்கை தேவி

கலைஞனின் கலை
உள்ளத்தை உசுப்பி
கவி என்னும் பெயரில்
கவிகள் பல
எழுதச் சொல்லி
என்றும் தூது
விட்டுக் கொண்டே
இருக்கின்றாள்
தொடர்ந்து கொண்டே
செல்கின்றாள்

6 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இயற்கை அன்னை அளித்திட்ட அற்புதங்கள் ஆயிரம்...

ரசித்துக்கொண்டே இருக்க ஆயுள் போதாமல்...

தங்களின் பயணம் இயற்கை அழகை போல் வாழ்கை முழுதும் சிறக்கட்டும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Unknown said...

//இயற்கை தேவி

கலைஞனின் கலை
உள்ளத்தை உசுப்பி//
இந்த வார்த்தைகளின் கோர்வை நன்றாக இருக்கிறது.

Unknown said...

மீனா மேடம் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Learn said...

கவி வரிகள் அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in