Monday, October 4, 2010

கற்பனை

தெருக்கோடி செடியில் குலுங்கும் ரோஜாவில்
திருமண நாளில் அணிந்திருந்த
மாலையை மறுபடி காண்பதும்

விடலைக் குழந்தையின் தனி அறையில்
பரிணாம வளர்ச்சியை முழுமையாக அறிவதும்

யு-டுயூப் பாடலில் குருவாயுரப்பன் கோவில்
ஒலி முழக்கத்தைக் கேட்பதும்

பாடல் ஒன்றில் கல்லூரிக் கலை விழாவை
மீண்டும் காண்பதும்

முன்பொருநாள் அம்மை அப்பனுடன் கேட்டப் பாடலில்
இன்று அவரை நெஞ்சருகில் கொணர்வதும்

பழக்கமாகிப் போனது உண்மையோ
பக்குவமாய் மனதை நம் வசப் படுத்தி விட்டால்
இன்னும் வேறு என்ன மாயமோ

No comments: