நங்கையர் நலம்
ஒரே ஒரு லக்ஷ்யம் சபரி மாமலா
ஒரே ஒரு லக்ஷ்யம் சபரி மாமலா
ஒரே ஒரு மோஹம் திவ்ய தரிசனம்
ஒரே ஒரு மார்க்கம் பதினெட்டாம் படி
ஒரே ஒரு மந்திரம் சரணம் ஐயப்பா
ஒருமையோடு கூடி ஒழுகி வந்தேன்
ஒரே ஒரு மாதம்
எதற்காக எனக்கிந்த கருணை?
என் பாவம் தீர்த்த நீ
பிறர் பாவம் தீர்க்க வை
இல்லை இந்த கணம்
எமனிடம் அழைத்துச் செல்
நான் பார்த்த உண்மை
பிறர் அறிய செய்ய வேண்டும்
வெள்ளம் போல் புரண்டு வரும்
வேங்கை பிரித்தெடுத்து
அடுக்கித் தர காலம் காணாது
என் நாவில் வந்து
நாளொன்று நங்கைஒன்று
என்று நகரத்து
இல்லை எனக்கு வேண்டாம்
இந்த உயிர்
நங்கையர் நலிந்திருக்க
நெருக்கத்தில் நீயிருக்க
பூஜை நடத்தினர்
பிரசாதம் மறந்தனர்
இல்லை மறைத்து வைத்து
விளையாடி மனம் மகிழ்ந்தாய்
விளையாட்டை மாற்று
நீ மாற்றும் வரை நான்
விளையாட மாட்டேன்
ஒரு நங்கை நகர்த்தினால்
ஒரு தரம் விளையாடுவேன்
இனி உன் இஷ்டம் செய்வதை செய்
மன்னித்து விடு , மன்னித்து விடு
என்னை.
2 comments:
நான் பார்த்த உண்மை
பிறர் அறிய செய்ய வேண்டும்
நம் படைப்பின் நோக்கமும்
நாம் எழுதும் நோக்கமும் அதுதானே
அருமையாகச் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள்//
ஒரு நங்கை நகர்த்தினால்
ஒரு தரம் விளையாடுவேன்
இனி உன் இஷ்டம் செய்வதை செய்
மன்னித்து விடு , மன்னித்து விடு
என்னை.
-------
நல்லாயிருக்கு.
Post a Comment