Monday, October 4, 2010

கற்பனை

தெருக்கோடி செடியில் குலுங்கும் ரோஜாவில்
திருமண நாளில் அணிந்திருந்த
மாலையை மறுபடி காண்பதும்

விடலைக் குழந்தையின் தனி அறையில்
பரிணாம வளர்ச்சியை முழுமையாக அறிவதும்

யு-டுயூப் பாடலில் குருவாயுரப்பன் கோவில்
ஒலி முழக்கத்தைக் கேட்பதும்

பாடல் ஒன்றில் கல்லூரிக் கலை விழாவை
மீண்டும் காண்பதும்

முன்பொருநாள் அம்மை அப்பனுடன் கேட்டப் பாடலில்
இன்று அவரை நெஞ்சருகில் கொணர்வதும்

பழக்கமாகிப் போனது உண்மையோ
பக்குவமாய் மனதை நம் வசப் படுத்தி விட்டால்
இன்னும் வேறு என்ன மாயமோ

உறவுகள்

உறவுகளில் நான் காண்பதோ அன்பு
சிலர் காண்பதோ பகை, அது தான் ஏனோ?

உறவு முறைகளில் தான் எத்தனை விதம்
அவைக் காலப் போக்கில் குறைந்தும் போகுமோ?

உறவினரைப் பார்க்க கடல் கடந்து
போக வேண்டுமாம் பலருக்கு
ஆனால் நண்பரெல்லாம் உறவினருக்கு
ஈடு கொடுக்கின்றனராம் இவர்களுக்கு

பள்ளியில் படிக்கின்றனராம் மருமகனும் மருமகளும்
தினம் 'பேஸ் புக்கில்' கலந்து பேசத்
துடிக்கின்றனராம் இவர்களும்

பார்பிகுவிலும் ஏரிக்கரைப் பிக்னிக்கிலும்
தொடருதாம் சில உறவுகள்
பட்டனைத தட்டி தட்டி 'யாஹூ குரூப்-ல்'
தொடருதாம் இன்னும் சில உறவுகள்

செடி வளர்க்க தண்ணீர் ஊற்றுகிறாய்
உறவை வளர்க்க அன்பை ஊற்று

வளர்த்த செடியில் பழங்கள் பறிக்கின்றாய்
வளர்த்த உறவில் அன்பின் முத்திரையை
காண்கின்றாய் அன்றோ?

வாழ்வைத் தொடங்கும் பச்சைக் குழந்தையோ
அன்னை என்ற உறவில் அர்த்தம் காணத் துவங்குதாம்

வாழ்வில் எல்லாம் கண்ட பாட்டனோ
உறவின் மீது உள்ள பற்றில் இருந்து விடுபடத் துடிக்கின்றாராம்