Thursday, November 25, 2010

இன்று முதல்

உண்மையான அபிவிருத்தி நம் உள்ளிருந்தே வரக் கூடும்
சொர்க்க வாயிலை நாமே தான் திறக்கக் கூடும்

நமக்குள் புதைந்து கிடக்கும் சுதனங்களை
இன்றே தோண்ட முனைவோம்

நம் சாதுரியங்களை உலகுக்கு
பரிசாக அளிப்போம்

சுற்றத்தாரின் நன்மனத்தை கறந்தெடுத்து
இருதயத்து அறை வீட்டுக்குள் இட்டுக் கொள்வோம்

நட்பினரின் நன்மனத்தை தினம்
மாலையிட்டுக் கொள்வோம்

குடும்பத்தில் உபசமனம் பரப்பிட
பொறுத்து நடப்போம்

வினை

ஒருவனுக்கு நோய் வந்தால் அது வினை
சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தால் அது வினை

பெண் பெண்ணாக இல்லை எனில் அது வினை
ஆண் ஆணாக இல்லை எனில் அது வினை

வினை தீர்க்கும் விநாயகனே வணங்கித் துதிப்பேன்
விநாயகனே என்று பாடும் நீ

உன்னை அறிந்து கொண்ட நாள் வினையைத்
தீர்த்து விட்டாய்