Sunday, October 9, 2011

மறைந்திருக்கும் அருள்

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

கோவிலில் அர்ச்சனை சடங்கு
ஒருவர்க்கு இருவர்க்கு அல்ல

கோவிலுக்குள் எழும்பும் ஒலி
அனைத்து உயிர்கள் அமைதி பெற வேண்டுகோள்

கூடிய மக்கள் வாழ்த்தியபடி அமர்ந்திருக்க
வாடிய மக்களும் வல்லமை பெறவிருக்க

பிறவி நோயாளியும் நோயைப் பிரித்தெடுக்க
குடும்பம் பிரிந்துடைக்கப் பட்ட துயர் துடைக்கப் பட

மக்கள் மாறிக் கொண்டிருக்க,
சூழ்நிலை மாறிக் கொண்டிருக்க
மாறாதது

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

Sunday, August 14, 2011

புன்னகை

புன்னகைக்குள்
காரணம் புதைந்திருக்கும்

புன்னகித்து புன்னகித்து
பரவசம் பகிர்ந்து பகிர்ந்து

புன்னகையின் பிற்பயனாய்
பெரும் புத்துணர்ச்சி
பெருக்கி பெருக்கி

புன்னகை படர்ந்த முகமாய்
பாசத்தை பொழிந்த முகமாய்

பலர் முன் திரிந்து திரிந்து
பலரை நெஞ்சுக்குள் ஈர்த்து ஈர்த்து

பலருக்காக பல நாட்கள்
வாழ்ந்து வாழ்ந்து

வாழ்க்கை வாழ்வது தனக்காக அல்ல
பலருக்காக என அறிந்து அறிந்து

நாட்களைத் தள்ளும் மானிடன்
அவனல்லவா உயர்ந்தவன்?

Saturday, July 23, 2011

மான் கண்ட சொர்க்கங்கள்

சிங்கக் குட்டியின் தொல்லை
மானிற்கு சுகம்

சிங்கக் குட்டியின் பரிசு
மானிற்கு வாரிசு

சிங்கக் குட்டிகள் அணி வகுத்து
மான்களைத் தம் வசப் படுத்தின

மான்களோ சிங்கக் குட்டிகளைத்
தேடித் தேடித் தம் வசப் படுத்தின

மான்களும் சிங்கக் குட்டிகளும்
உறவாடி மகிழ்ந்தன

Sunday, July 10, 2011

கணினிக் காளை

காளையாகப் பிறந்ததனால்
கால்கட்டு மட்டுமா போடுவான்

கணினியையும் கட்டிக் கொண்டு
ஆளுவான்

மனைவியிடம் உன் கை விட மாட்டேன்
என்று உறுதியிட்டு

மனைவியின் கையை விட
மவுசின் கையையே அதிகம் விரும்புவான்

இரவில் மனைவியிடம் மயங்கிய அவன்
பகலில் மானிடரிடம் மயங்குகிறான்

மனைவி இல்லாமல் ஒரு மாதம்
இருந்து விடுகிறான்

மானிடர் இல்லாமல் ஒரு வாரம்
கூட தாங்க மாட்டான்

ஹார்டு டிஸ்க் ஐ கழட்டிப் பார்ப்பான்
கீபோர்டில் உள்ள தூசு துடைப்பான்

கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்

- கணினிக் காளையின் மனைவி

Saturday, July 9, 2011

அமைதி

கானம் பாடும் குயில் இருக்க
காந்தம் என கண் இருக்க
காட்சி எங்கும் இறைவன் இருக்க
கடுகு தெறிப்பது போன்ற கோபம்
கடுகளவும் இல்லையடி பெண்ணே!

மூளை மங்கிய போதும்
மும்மரமான கவலை வேண்டாம்
கவலை இல்லா காலமதை
கடனாய்த் தருவான்
கல்லாய் இருக்கும் இறைவன்

கடனைத் திருப்பித் தரும் வேளை
கவலை தீர்க்கும் மருந்தாவாய்
கற்றது கற்றபடி கற்பித்து விடுவாய்

கவலை தோய்ந்த வாழ்விருந்து
விடுபட்டு பறந்த பரம்பொருளின்
சின்னமாய் நீயிரு

கவலை தேக்கி வைத்த மனமும்
பரம்பொருளே! ஆட்டத்தின்
முதல் பாதி தேக்கி வைத்த கவலை
மறு பாதி தீர்த்து வைக்கும் மருந்து

இன்றே அமைதி உன்னிடம் இருக்கு
இருப்பதை இயல்பாய் கண்டு விடு
அமைதி கானம் என்றும் பாடு!

Saturday, June 18, 2011

அவன்

அவன் பார்வையில் ஓராயிரம்
கவிதைகள் எழுதினேன் காற்றில் நானே

அவன் உருவத்தில் ஓராயிரம் முறை
துள்ளினேன் நானே

அவன் உள்ளத்தில் ஓராயிரம் முறை
குடி புகுந்தேன் நானே

அவன் அன்பில் சர்க்கரையாய்
கரைந்தேன் நானே

அவனைச் சார்ந்து சார்ந்து வாழும் கணமெல்லாம்
பொன் என்று உரைத்தேன் நானே

அன்பே வெல்லும்

அறிவு சார்ந்த பெண்ணே
அகிலமும் அறிவைச் சார்ந்து இராது

அறிவால் உன்னை ஆளாதே
அன்பால் உன்னை ஆக்கிரமி

ஏன் எதற்கு கேள்வி எல்லாம்
வெறும் பாட சாலைக்கு மட்டும்

ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை
மனித உறவுகளில்

பாட சாலையில் உறவுகள் பாடம்
இல்லாமல் போனது

இன்று அகிலத்தையும்
ஆட்டி வைக்கிறது

பெண் படிக்காமல் இருப்பது நல்லதன்று
படித்தும் உறவுகள் பற்றி அறியாமல்
இருப்பது அதனினும் நல்லதன்று