Saturday, April 7, 2012

தூணிலும் இருப்பார்

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
தக்க துணையிலும் இருப்பார்

நல்மக்கள் கூடும் அவையிலும்
பிணி தீர்க்கும் பணி கொண்ட
நல்மக்கள் கரங்களிலும்
இருப்பார்

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
தக்க துணையிலும் இருப்பார்

சேவை சிறப்பாகச் செய்வர்
நல்மக்கள் அவர்தம் சொற்களிலும்
சேவைக்கு தன்னை அர்ப்பணித்த
ஒரு நல்மகன் அவர்தம் எழுத்திலும்
இருப்பார்

அருகிலே மிக அருகிலே
தாயைப் போல் இருப்பார்
கண்டு கொண்டால் தெரியுமே
அவர் பெருமை

அவர் இருக்கும் நிலை கண்டதும்
கலக்கம் என்ற சொல்லுக்கு
வேலை இல்லை அதிகம்
அவர் இருக்கும் நிலை கண்டதும்
கலக்கம் என்ற சொல்லுக்கு
வேலை இல்லை அதிகம்

1 comment:

சிவகுமாரன் said...

அருமை.
அவனை கண்டு கொண்டால்
அவன் கண்டு கொண்டால்
நாம்
வேறெதையும்
கண்டு கொள்ளத் தேவையில்லை.