Saturday, June 18, 2011

அவன்

அவன் பார்வையில் ஓராயிரம்
கவிதைகள் எழுதினேன் காற்றில் நானே

அவன் உருவத்தில் ஓராயிரம் முறை
துள்ளினேன் நானே

அவன் உள்ளத்தில் ஓராயிரம் முறை
குடி புகுந்தேன் நானே

அவன் அன்பில் சர்க்கரையாய்
கரைந்தேன் நானே

அவனைச் சார்ந்து சார்ந்து வாழும் கணமெல்லாம்
பொன் என்று உரைத்தேன் நானே

அன்பே வெல்லும்

அறிவு சார்ந்த பெண்ணே
அகிலமும் அறிவைச் சார்ந்து இராது

அறிவால் உன்னை ஆளாதே
அன்பால் உன்னை ஆக்கிரமி

ஏன் எதற்கு கேள்வி எல்லாம்
வெறும் பாட சாலைக்கு மட்டும்

ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை
மனித உறவுகளில்

பாட சாலையில் உறவுகள் பாடம்
இல்லாமல் போனது

இன்று அகிலத்தையும்
ஆட்டி வைக்கிறது

பெண் படிக்காமல் இருப்பது நல்லதன்று
படித்தும் உறவுகள் பற்றி அறியாமல்
இருப்பது அதனினும் நல்லதன்று